இலங்கையின் தலை நகர் கொழும்பில் இருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம் (Galle Face) காலி முகத் திடல்.
ஆசியாக் கண்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் இந்த காலி முகத்திடல் கருதப் படுகிறது.ஆசியாவின் மிகப் பிரபலமான கடற் கரையாக தமிழகத்தின் மெரீனா கருதப் படுகிறது.அதற்கடுத்த இடம் காலி முகத்திடலுக்குத்தான்.
காலி முகத்திடல் எப்போதும் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
உலகின் பல நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பிரயாணிகள் ஒரு முறையேனும் இந்த காலி முகத்திடலுக்கு சென்று வருவது வழக்கம்.
இலங்கையின் ஆட்சி செய்யும் அரசாங்கள் தங்களின் முக்கியமான நிகழ்ச்சிகளை இந்த இடத்தில் தான் பெரும்பாலும் நடத்துவார்கள்.
அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
புனிதமிக்க ரமழானும் புனிதம் கெட்ட முஸ்லீம்களும்.
ரமழானின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரவு நேரங்களில் இந்த காலி முகத்திடல் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
இம்முறையும் அதே நிலை தொடர்ந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.இருந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் நமது சமுதாய மக்களின் நிலைமையும் தான் மிகவும் கவலைக்குறியதாகும்.
அதாவது காலி முகத்திடலுக்கு இரவு நேரங்களில் வரும் முஸ்லீம் சகோதர சகோதரிகளில் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வருபவர்களும் உண்டு இதே நேரம் தனியாக அல்லது நண்பர்கள் சகிதம் வருபவர்களும் உண்டு.
ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு
இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)
”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)
”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)
இவர்களில் பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற மதத்தினராலேயே கடுமையாக விமர்சிக்கப் படுவதுதான் மிக கவலையான விஷயமாகும்.
ஆபாசமான சினிமாப் பாடல்கள் தொடங்கி அசிங்கமான சிங்களப் பாடல் வரை ஒரு முஸ்லிமுக்கே இல்லாத அனைத்து காரியங்களையும் இவர்கள் செய்கிறார்கள்.
பெண்களை கிண்டலடிப்பது தகாத வார்த்தைகளால் அவர்களை வர்ணிப்பது அவர்களுக்கு கெட்ட வார்த்தைகளால் பேசுவது போன்றவை இவர்களின் இரவு நேர பொழுதுபோக்கு.(?)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை
கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய
பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது''
என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும்
இருக்கிறான்.அல் குர்ஆன் (33 : 59)
காற்றில் பரப்பது பலூன்களா முந்தானைகளா?
இரவு நேரத்தில் காலி முகத்திடலுக்கு செல்லும் பெண்களில் ஒரு பகுதியினர் சரியான முறையில் சென்று வந்தாலும் பெரும்பகுதியினர் மார்க்கத்திற்கு முரனான காரியங்களில் சர்வ சாதாரனமாக ஈடுபடுகின்றனர்.
ஆண்களுடன் சேர்ந்து இரவுக் குழியல் போடுவதும் கும்மாளமடிப்பதும் ஆண்களுக்கு நாங்கள் சலித்தவர்கள் இல்லை என்பது போல் அனைத்து அனாச்சாரங்களிலும் கலந்து கொள்வதும் இவர்களிடம் மார்க்கத்தின் வாடை கூட இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
முந்தானைகள் மூலம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளையெல்லாம் அன்னிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டிக் கொண்டு திரிகின்ற இத்தகைய பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் அத்துடன் இறைவனிடம் இதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப்
பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து
வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு
விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ்
கவனத்திற்கொள்ளத்தக்கதாகும் :
”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)
”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)
இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது)
நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.(24:31)
காலி முகத்திடல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் முஸ்லீம் சகோதரிகள் இஸ்லாமிய முறைப்படி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதையும் பார்க்க:-
Post a Comment