தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச்செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்துஎச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய்பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப்பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய்பேசுவார்கள்:
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச்செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்துஎச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய்பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப்பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய்பேசுவார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்:- “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- முனாபிஃக்கின் அடையாளம் மூன்ற பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான் நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி)
2) பொய்யின் வகைகள்: -
அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின்மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சிலமார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டேவெளியில் சென்று விட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள்நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- “என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி),ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி),
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: -
“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்;அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்றுமுறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:“அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“தனது கனுக்காலுக்குகிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தைபிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனதுபொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் முஸ்லிம்.
“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத்(அருள்வளம்)அளிக்கப்படும்! குறைகளைமறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி)அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)
இ) கணவுகளில் பொய் கூறுவது: -
தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால்,அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார்.ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காதுதாழ்த்தி ஒட்டுக் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம்உருக்கி ஊற்றப்படும். உயிரினத்தின் உருவப் படத்தை வரைகிறவர்அதற்கு உயிர் கொடுக்கும் படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில்‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாகப் பொய் சொல்கிறவர் மக்களின் பேச்சுகளை செவிதாழ்த்திக் கேட்பவர்…’என்று இடம் பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாகப்பொய் சொல்கிறவர்… உயிரினத்தின் உருவப்படம் வரைகிறவர்…’என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042
ஈ) கேட்பதை யெல்லாம் பிறரிடம் கூறுவது: -
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர்ஹாஃபிஸ் இப்னு ஆஸிம் (ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன காலகருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக்கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்குஅனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்றுகேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும்படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்றுகூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக்கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பமுயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -
யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில்விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.
அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: -
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர்அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளைகணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர்.அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள்அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
ஆதாரம்:அபூ தாவூத், அஹ்மத்)
அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும்பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-
“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளைவிளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் கூட அதை அவரிடம் திருப்பித் தந்து விடவேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :அபூதாவூத் மற்றும் திர்மிதி.
ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: -
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம்விளையாட்டாப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொருவார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும்கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை தீமைபட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று என் தாயிடம் வினவினார்கள். அதற்கு என் தாய் நான் அவருக்கு ஒரு பேரிச்சம்பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
“யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள்என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அதுபொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு
எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்றுநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா இப்னுமாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)
3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -
உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில்‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவ தோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.
அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக்தனம்) விதைக்கப்படும்: -
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும்அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் இறுதி நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதைநிறை வேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான்,மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்றுகூறினார்கள்.
அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்குச் செல்வத்தை அளித்ததால் மெய்யாகவே நாம் தாராளமானதான தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன்9:75)
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறுசெய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் இறுதி நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
.
ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச் செல்லும்: -
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பதுபுண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம்செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில்உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது.தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில்அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -
இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -
(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களு
ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -
அல்லாஹ் கூறுகிறான்: 39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அவர்களுடைய முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர் பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம்நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா.?’ என்று கேட்பதுவழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் தாம் கண்ட கனவை அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு நாள் அதிகாலை நேரம் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின் நபி(ஸல்)அவர்கள் எங்களிடம் பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு கனவில் இரண்டு வானவர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒருமனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் படுத்திருந்த வருடைய முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப்பிடரி வரை கிழித்தார்; அவ்வாறே அவரின் மூக்குத்துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லதுபிளந்தார் – பிறகு அவர் படுத்திருந்தவரின் மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப்பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம் விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார்.
ஆரம்பத்தில்செய்ததைப் போன்றே திரும்பத் திரும்பச் செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன்.அவ்விருவானவரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’என்றனர். நான் அவ்விருவரிடமும், நேற்றிரவு முதல் நான் பலவிந்தை களைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகிய வற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) ஆதாரம் : புகாரி (நீண்டஹதீஸின் சுருக்கம்)
ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறைநம்மிக்கை) ஏற்படாது.
ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -
1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவிகணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப்பட்டதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள்அறிவிக்கிறர்கள்: மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
யுத்தத்தின் போது மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)
இதையும் பார்க்க >>
* குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
* இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு...
* அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்...!!
* தொழுகையில் தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள்
* ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. ?
Post a Comment