அறுகம்பை குடாவை அண்டிய பகுதியில் அலையின் வேகம் குறைவாக உள்ள காரணத்தினால் இந்த பகுதியில் வெளியூர் உள்ளுார், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதும் நீந்துவதும் சறுக்குவதுமாய் இருப்பர்.
இந்த பிரதேசம் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்ற காரணத்தினால் அதிகப்படியான உள்ளுர் வெளியுர் முஸ்லிம்கள் இந்த கடற்கரையில் குளிப்பர், இந்தக்கடற்கரையில் நுாற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குளிப்பதை காணலாம்.
அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)
முஸ்லிம் என்ற தனித்துவத்தை நாம் மறந்து செயற்படுகிற பொழுது அதிக இன்னல்களுக்கு நாம் ஆளாகிறோம், அண்ணலார் சொன்ன பிரகாரம் வாழாமல் இருப்பதாலேயே நாம் இன்று பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.
அறுகம்பை கடற்கரையில் முஸ்லிம் பெண்கள் ஹபாயா மற்றும் சல்வார், சோட்டி (இரவு நேர உடை) போன்றவற்றுடன் குளிக்கின்றனர், கடற்கரையில் ஒரு பெண் மூடிய ஆடையுடன் குளித்தால் ஒரு முறை நீர் பட்டால் உடை அப்படியே மேனியுடன் ஒட்டிவிடும், இது வீட்டில் குளித்தாலும்தான், பகிரங்கமாக ஒட்டிய ஆடையுடன் குளி்ப்பது எவ்வளவு தவறு, எவ்வளவு விரசம் எத்தனை ஆண்கள் பார்ப்பர்?
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
மேனி பருத்த மேனியாக இருந்தால் சொல்லவே தேவையில்லை, உள்ளாடைகள், மார்பகங்கள், இன்னோரன்ன பகுதிகள் மொடல் அழகிகள் போல காட்சி தரும் இதனை பார்க்கவே அதிக ஆண்கள் இந்த கடற்ரைக்கு செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற மதத்தினராலேயே கடுமையாக விமர்சிக்கப் படுவதுதான் மிக கவலையான விஷயமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர் அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை முதலாம் பிரிவினர் யார்எனில் பசுமாட்டின் வாலைப்போன்று நீண்ட சாடடைகளை தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிக்கும் கூட்டத்தினர் (இரண்டாம் பிரிவினர் யாரெனில்) மெல்ய உடை அணிந்து தம் தோள்களைன சாய்த்த படி (குலுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்ககூடிய பெண்கள் ஆவர் அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்ககூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப்போன்று இருக்கும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்ôர்கள் (ஏன்) அதன் வாதையை கூட நுகர மாட்டார்கள் சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு தொலைவிருந்து வீசிக்கொண்டிருக்கும்.நூல்: முஸ்ம் (5098)
ஒரு பெண் தன் கணவன் முன்னால் எப்படியும் இருந்து கொள்ளலாம் ஆனால் தனியாக இருக்கும் போது கணவன் முன்னால் அமருவதைப்போன்று அமரக்கூடாது ஏனென்றால் ஆண்களுக்கு தனியாக இருக்கும் போது என்ன தடை போட்டார்களோ அதை தடை பெண்களுக்கும் பொருந்தும் எனவே பெண்களும் தனியாக இருக்கும் போது மறும உறுப்பை காத்துக்கொள்ள வேண்டும்.
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்
ஆனால் இன்று பல ஆண்களும் பெண்களும் ஒன்றாக குளிக்க கூடிய நிலைமையை பார்க்கின்றோம் இதை குடும்பம் குடும்பமாக மார்க்கத்தை மறந்து உலக இன்பத்துக்கு அடிபணிந்து ஒவ்வொரு ஆண்மகனும் வேக்கப்பட வேண்டும்.
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது,அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். அல் குர்ஆன் 2:161
முந்தானைகள் மூலம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளையெல்லாம் அன்னிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டிக் கொண்டு திரிகின்ற இத்தகைய பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் அத்துடன் இறைவனிடம் இதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், இது மாபெரும் தவறு, பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல், பொத்துவில் முஸ்லிம் துாய இளைஞர்கள் அமைப்பு, முஸ்லிம் சமூக அமைப்புகள் இது குறித்து கவனம் எடுக்கும் அதே வேளை தங்கள் சகோதரிகளை, மனைவிமார்களை அழைத்துவந்து மற்றைய ஆண்களுக்கு விருந்து படைக்கும் இந்த குளியலை முஸ்லிம் ஆண்களும் தவிர்த்து கொள்ளுங்கள்.
"அல்லாஹ்வின் சாபத்தை மற்றும் மூமின்கள் மலக்குகள் சாபத்தை வாங்கிகொண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது" அல்லாஹ் அக்பர் முஸ்லிம் பெண்களே திருந்தி கொள்ளுங்கள்! விடாதே. இந்தசத்திய மார்கத்திலேயே எங்களது உள்ளங்களை நிலைத்து இருக்க செய்வாயாக!.
ஆக்கம்:- பாரிஸ் தூயவழி.காம்
Post a Comment