அது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் நிலையும் (சுறுக்கக் கட்டுரை (லைலதுல் பராஆ) பராத் இரவு என்று பிரபலமாக அழைக்கப்படும் இவ்விரவு இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு இரவே அல்லாமல் நபி ஸல் அவர்கள் வழிகாட்டிய ஓர் இரவல்ல.
குர்ஆனிலும் ஹதீஸிலும் லைதுல் கத்ர் (கத்ருடைய இரவு) என குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் பராத் இரவு என்ற வாசகத்தை அவ்விரண்டிலும் எங்கும் காண முடியாது.
இந்தப் பெயர் உருவான வரலாறு யாதெனில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி (நிஷ்புஸ் ஷஃபான்) என பதிவாகியிருக்கும் சில பலயீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வைத்தே ஆகும்.
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று அல்லாஹ்வும் ரஸூலும் வழிகாட்டாத ஒன்று மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது என்பதும் அது பித்அத் வழிகேடு என்பதுமாகும்.
அந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் கூறியதாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி (பராத் இவு)15 ஆம் நாளில் நோன்பு நோற்றல் மற்றும் விசேட இபாதத்களில் ஈடுபட வேண்டும் என வந்துள்ள அத்தனை செய்திகளும் பலயீனமானவைகளும் இட்டுக்கட்டப்பட்டவைகளுமாகும்.
01- ஆயிஷா நாயகியைத் தொட்டும் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் பதிவாகியுள்ள செய்தி.
"ஷஃபான் மாதத்தின் நடு இரவில் அல்லாஹ் (அடி) வானிற்க்கு இறங்கி வருகின்றான் அவ்விரவில் கல்பு கோத்திரத்தாரின் ஆடுகளின் உரோமங்களை விடவும் அதிகமாக பாவங்களை மன்னிக்கின்றான்."
இந்த ஹதீஸ் பலயீனமான ஹதீஸாகும். இதில் இடம்பெறும் யெஹ்யா இப்னு அபீ கதீர் மற்றும் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்ற அறிவிப்பாளர்கள் பலயீனமானவர்களாவர். இவர்கள் இடம்பெறும் இது தொடர்பான ஏனைய ரிவாயத்களும் பலயீனமானவைகளே ஆகும்.
02- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்களைத் தொட்டும் முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ள செய்தி
"ஷஃபான் மாதத்தின் நடு இரவில் தனது படைப்புகளை நோக்கி அல்லாஹ் வருகின்றான். அவனுடைய அடியார்களில் பகைமை பாராட்டுபவன் மற்றும் கொலையாளியை தவிர மற்ற அனைவரது பாவங்களையும் மண்னிக்கின்றான்."
இந்த செய்தியும் பலயீனமானதாகும். இதில் இடம்பெறுகின்ற ஹுயைய் இப்னு அப்தில்லாஹ் என்கிற அறிவிப்பாளரும் அப்துல்லாஹ் இப்னு லஹியா என்கின்ற அறிவிப்பாளரும் பலயீனமானவர்களாவர்.
03- அலி ரலி அவர்களைத் தொட்டும் ஸுனனு இப்னி மாஜாவில் பதிவாகியுள்ள செய்தி.
"ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்துவிட்டால் அதன் இராப் பொழுதில் நின்று வணங்குங்கள் அதன் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள்"..........
இந்த செய்தி மவ்லூஆன இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதில் இடம்பெறுகின்ற அறிவிப்பாளரான இப்னு அபீ ஸப்ரா என்ற அறிவிப்பாளர் ஹதீதுகளை இட்டுக்கட்டகூடிய பலயீனமான அறிவிப்பாளர் என ஹதீஸ் கலை வல்லுனர்களான இப்னி ஹிப்பான், அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம், அஹமத் இப்னு ஹம்பல் மற்றும் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸயே பராத் நோன்பு பிடிப்பதற்க்கும் அவ் இரவில் விசேட தொழுகைகளை தொழுவதற்கும் எமது சமூதாய மக்களும் ஒரு சில உலமாக்களும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
எப்படி நபி ஸல் அவர்களது பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை வைத்து ஒரு இபாதத்தை எம்மால் உருவாக்க முடியும்? இது தொடர்பாக வருகின்ற அத்துனை செய்திகளும் பலயீனம் எனின் எப்படி இது இபாதத்தாக இறைவனிடம் அங்கீகரிக்கப்படும்.
எனவேதான் இதனை நாம் தெளிவான பித்அத் என்கின்றோம். இப்படியான ஒரு இரவு குர்ஆன் ஹதீஸில் இல்லாத புதிதாக உருவான வழிகேடான இரவாகும்.
எனவே பராத் இரவு என்ற பெயரில் நோன்பு நோற்கவும் விசேட தொழுகைகளில் ஈடுபடவும் அந்நாளை சிறப்பிக்கவும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. இதனை புரிந்து பாவத்திலிருந்து எம்மைப் பாதுகாத்திடுவோம்.
Post a Comment